Tuesday, 28 August 2018

விண்கற்கள் நாள் - ASTEROID DAY

இன்று (ஜூன் 30) விண்கற்கள் நாள் (ASTEROID DAY) எனவே விண்கற்களைப் பற்றித் தெரிந்து கொள்வோமா?
விண்கற்கள் என்றால் என்ன?
நமது சூரிய மண்டலத்தின் (SOLAR SYSTEM) செவ்வாய் கோளுக்கும் (MARS) வியாழன் கோளுக்கும் (JUPITER ) இடையே சிறிதும் பெரிதுமான கற்கள் சூரியனைச் சுற்றிவருகின்றன. இவையே விண்கற்கள் (ASTEROIDS) எனப்படுகின்றன.
எரிநட்சத்திரங்கள் அல்லது எரிகற்கள் (SHOOTING STAR) என்பவை யாவை?
இந்த கற்கள் விண்ணில் இருப்பதனால் இவற்றை விண்கற்கள் என்கிறோம். இவை பூமியியின் ஈர்பால் பூமியின் வளிமண்டலத்திற்குள் வரும்போது காற்றின் உராய்வால் வெப்பமடைந்து எரிந்து விடுகின்றன. இப்போது அவற்றை எரிகற்கள் அல்லது எரிநட்சத்திங்கள் என்கிறோம். இவை பெரும்பாலும் வளிமண்டலத்திலேயே எhpந்துவிடுவதால் இவற்றால் பூமிக்கு ஆபத்தில்லையென்றாலும், சிலசமயம் முழுவதும் எரிந்துமுடிப்பதற்குள் பூமியில் விழுந்துவிடும். இதுபோன்ற விண்கற்கள் சேகரிக்ப்பட்டு அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டுள்ளன.
விண்கற்கள் எவற்றால் ஆனவை?
மண் பொருளான விண்கற்கள் உலோகப் பொருள்களால் ஆன விண்கற்கள் என இரண்டு வகையான விண்கற்கள் உள்ளன.
விண்கற்கள் எங்கிருந்து வருகின்றன?
இக்கேள்வியிலேயே பதில் அடங்கியுள்ளதாகக் கூறலாம். விண்கற்கள் அனைத்துமே விண்ணிலிருந்து தான் வருகின்றன. சொல்லப் போனால் விண்வெளியில் ஒன்றல்ல லட்சக் கணக்கில் விண்கற்கள் இருக்கின்றன. நெல்லிக்காய் அளவிலான விண்கற்களையும் சேர்த்துக் கொண்டால் கோடானு கோடி விண்கற்கள் உள்ளன எனலாம்.ஆனால் இவை எதுவும் மரத்தில் மாங்காய் தொங்குவதைப் போல பூமிக்கு மேலே வானில் நிலையாக ஓரிடத்தில் இருப்பது இல்லை எல்லா விண்கற்களுமே அதிகமான வேகத்தில் சூரியனைச் சுற்றி வருகின்றன.
இவை ஏப்போது தோன்றின?
சுமார் 450 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பிரபஞ்சம் தோன்றிய போதே இந்த விண்கற்களும் தோன்றியதாகக் கருதப்படுகிறது. ஆரம்பத்தில் இந்த விண்கற்கள் கூட்டத்தில் பல கோடி விண்கற்கள் இருந்திருக்க வேண்டும். கிலப்போக்கில் ஈர்பினால் பல ஒன்று சேர்ந்து கோள்களாக மாறிவிட்டிருக்கின்றன.
இவை என்ன அளவில் இருக்கும்?
விண்கற்கள் சில மீட்டர் நீளத்திலிருந்து பல கிலோமீட்டர்கள் நீளம் வரையிலும் உள்ளன. பொதுவில் பெரிய அளவில் உள்ள விண்கற்களை அஸ்டிராய்ட் என்று குறிப்பிடுகின்றனர். இருபது அல்லது முப்பது மீட்டர் நீளமுள்ள விண்கற்கள் அஸ்டிராய்டுகள் என்றே குறிப்பிடப்படுகின்றன.மாங்காய் சைஸ் அல்லது கூழாங்கல் அளவுக்கு இருக்கும் விண்கற்களும் விண்வெளியில் நிறையவே உள்ளன.
இவை ஏன் பூமியில் விழுகின்றன?
இவை சூரியனைச் சுற்றும்போது செவ்வாய்(Mars), பூமி(Earth), வெள்ளி(Venus), புதன்(Mercury) ஆகியவற்றின் சுற்றுப்பாதைகளை குறுக்காகக் கடக்கின்றன. இது ஆளில்லா இரயில்வே கிராசிங்கை வாகனங்கள் கடப்பதற்கு ஒப்பானது.பூமியின் சுற்றுப்பாதையை ஒரு விண்கல் கடக்கும் நேரத்தில் அதற்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரம் பல ஆயிரம் கிலோ மீட்டராக இருக்குமானால் பிரச்சினை இல்லை. ஆனால் பூமி தனது சுற்றுப்பாதையில் எந்த இடத்தில் இருக்கிறதோ அந்த இடம் வழியே விண்கல் கடக்க முயன்றால் பிரச்சினைதான். இரயில்வே கிராசிங்கில் லாரி மீது ரயில் மோதுவது போன்று பூமியின் மீது விண்கல் மோத நேரிடும்.
இவை பூமியில் விழுவதால் பூமிக்கு ஆபத்து ஏற்படுமா?
ஓவ்வொருநாளும் குறைந்தது 20 பவுண்டு எடையுள்ள 3 அல்லது 4 விண்கற்கள் பூமியை நோக்கி வருகின்றன. 1908 ஆம் ஆண்டு மிகப்பெரிய விண்கல் ஒன்று மத்திய சைபீரியாவில் விழுந்து மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தியது. அதில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் இருந்த காடுகள் அழிந்தன. ‘ரெயின் டீர்' என்ற மான் இனம் முழுவதுமாக அழிந்தது.
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் டெட்ரிஃபைட் ஃபாரஸ்ட் என்னும் பாலைவனத்திற்கு அருகே பாரிஸ்கர்கிடாரப் என்றொரு பள்ளம் உள்ளது. அதன் ஆழம் 600 அடி. குறுக்களவு சுமார் 1000 மீட்டர். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு விண்கல் ஒன்று விழுந்த சுவடுதான் அந்தப் பள்ளம். இதுபோன்று ஏராளமான பள்ளங்களை பூமியில் விண்கற்கள் விழுந்து ஏற்படுத்தி உள்ளன. பூமியிலும் சந்திரனிலும் விண்கற்கள் விழுந்த இடம் பள்ளங்களாகக் காட்சியளிப்பதைப் பார்க்க முடிகிறதல்லவா?
நன்றி
பாலா பாரதி



சிவப்பு நிலா

வானில் நிலவின் விளையாட்டு!
முழு சந்திரகிரகணம்- சிவப்பு நிலா
27,28 - 07 - 2018
நாளை (27-07-2018) இரவு முழு சந்திரகிரகணம் நடைபெற உள்ளது. முழு சந்திரகிரகணம் வானில் நிகழும் வழக்கமான நிகழ்வுதான். இதை சிவப்பு நிலா என்கிறார்கள்.
சந்திரகிரகணம் எனப்படும் இந்த நிலவு மறைவு எப்படி ஏற்படுகிறது?
முன்பெல்லாம், நிலாவை பாம்பு விழுங்குவதால்தான் முழுநிலா திடீரென மறைந்து போகிறது என்று மக்கள் நம்பினார்கள். தேவர்கள், அசுரர்கள், ராகு, கேது என்று கதைகளையும் சொன்னார்கள். ஆனால், இன்று அறிவியலின் வளர்ச்சியால் அவை கட்டுக்கதைகள் என்பதும் பூமியின் நிழல் நிலவின் மீது விழுவதால் தான் சந்திர கிரகணம் ஏற்படுகிறது என்பதும், பள்ளிப்பிள்ளைகளுக்குக் கூட தெரியும். நிலவு, தானாக ஒளி விடுவதில்லை, அது சூரியனின் ஒளியைத்தான் எதிரொளிக்கிறது.
பூமி சூரியனைச் சுற்றிவருவதும், நிலா பூமியை சுற்றிவருவதும் நாம் அறிந்ததுதான். அப்படி சுற்றும்போது ஏதோ ஒரு சமயத்தில் இவை மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வருகின்றன. அப்போது பூமியானது நிலவுக்கும் சூரியனுக்கும் இடையில் வருவதாக வைத்துக் கொள்வோம். அப்போது, நிலவின் மீது படும் சூரியவெளிச்சம் பூமியால் தடுக்கப்படுகிறது. அதாவது, பூமியின் நிழல் நிலவின் மேல் விழுகிறது. அதனால் சந்திரன் சிறிது நேரம் மறைந்து போகிறது. பூமியின் நிழலில் இருந்து வெளியில் வந்தவுடன் மீண்டும் பிரகாசிக்கிறது. இதனைத் தான் நாம் சந்திரகிரகணம் (Lunar Eclipse) என்கிறோம். சூரியன் இருக்கும் திசைக்கு எதிர்த்திசையில் நிலவு இருக்கும்போதுதான் இது நடைபெற வாய்ப்புள்ளது இல்லையா? அதனால்தான் சந்திர கிரகணம் எப்போதும் முழுநிலவு நாளில்(Full Moon Day) நிகழும்.
சிவப்பு நிலா(Blood Moon) என்றால் என்ன?
சந்திரகிரகணம் எனப்படும் நிலவு மறைவின்போது, நிலவு உதிக்கும்போது பூமியின் நிழலால் மறைக்கப்பட்டு உதிக்கும் அப்போது சூரியஒளி நிலவின் மேல் நேரடியாக படாது. ஆனால், நமது வளிமண்டலத்தால் சிதறடிக்கப்படும் ஒளி நிலவின் மேல்படும். குறைந்த அலைநீளமுள்ள ஒளிக்கதிர்கள் வளிமண்டலத்தால் சிதறடிக்கப்பட்டு, அதிக அலைநீளமுள்ள சிவப்பு நிறம் மட்டும் நிலாவை அடையும். இதனால் அது சிவப்பு நிறமாகத் தோன்றுமல்லவா இதையே 'சிவப்பு நிலா’(Blood Moon) என்கிறோம்.
கிரகணம் நடைபெறும் போது வெளியே வரலாமா?
வெளியே வரலாம், நமது இயல்பான வேலைகளைச் செய்யலாம். கிரகணம் என்பது வழக்கமாக பூமி, சந்திரன் இவை சுற்றும்போது ஏற்படும் நிழல் விளையாட்டுதான் என்பதால், அந்த சமயத்தில் நாம் வெளியில் வருவதாலோ, உணவு உண்பதாலோ, கருவுற்ற தாய்மார்கள் வெளியில் வருவதாலோ எந்த பாதிப்பும் ஏற்படாது.
கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்கக்கூடாது என்கிறார்களே?
சூரிய கிரகணத்தைத்தான் வெறும் கண்ணால் பார்க்கக்குகூடாது. சந்திர கிரகணத்தை வெறும் கண்ணாலோ, தொலைநோக்கி வழியாகவோ, பார்க்கலாம். எந்தவிதமான பாதுகாப்பு சாதனங்களும் தேவையில்லை.
எப்போது பார்க்க வேண்டும்?
இரவு 10:45 மணிக்கு பூமியின் நிழல் நிலவின் மேல் மெதுவாக விழ ஆரம்பிக்கும். இது பகுதி சந்திர கிரகணம் எனப்படுகிறது. 1:50 மணிக்கு பூமியின் நிழல் முழுதாக நிலவை மூடியிருக்கும். இதுவே, முழு சந்திர கிரகணம். பிறகு நிழல் மெதுவாக விலக ஆரம்பித்து விடியற்காலை 4:58 மணிக்கு முழுமையாக விலகிவிடும்.
எங்கிருந்துப் பார்க்கலாம்?
நீங்கள் இருக்கும் இடத்திலிருந்தே பார்க்கலாம். எங்கள் பள்ளிக்கு வந்தால் வல்லுந‌ர்களின் விளக்கத்துடன் தொலைநோக்கியில் பார்க்கலாம். உங்களுக்கு எழும் பல்வேறு வினாக்களுக்கு விடைக் காண வாருங்கள்.
Tamilnadu Science Forum Trichy Branch, Trichy Astro Club, Bharathi School இணைந்து நடத்த உள்ள இந்த நிகழ்வுக்கு உங்களை அழைக்கிறோம்.
இடம்: பாரதி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, இந்தியன்வங்கி காலனி, கே.கே நகர் சாலை, திருச்சி -21.
நேரம் : மாலை 7 மணி.
- பாலா பாரதி
(9944966826)



Telescope

* இந்நூற்றாண்டின் மிகநீண்ட சந்திரகிரகணம்.
* இந்த ஆண்டின் பெரிய வானியல் நிகழ்வு.
* செவ்வாய் எதிர்மறைப்பு (Mars Opposition)
* தமிழ்நாட்டின் பெரிய அமெச்சூர் தொலைநோக்கிகளுள் ஒன்று. ( 16" Dobsonian).
முழு சந்திரகிரகணம்- சிவப்பு நிலா
27,28 - 07 - 2018.
Tamilnadu Science Forum Trichy Branch, Trichy Astro Club, Bharathi School இணைந்து நடத்த உள்ள இந்த நிகழ்வுக்கு உங்களை அழைக்கிறோம்.
இடம்: பாரதி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, இந்தியன்வங்கி காலனி, கே.கே நகர் சாலை, திருச்சி -21.
நேரம் : மாலை 7 மணியிலிருந்து 10:30 மணிவரை வியாழன்(Jupiter), சனி (Saturn), செவ்வாய் (Mars) ஆகியவற்றைப் பார்க்கலாம். 10:45 மணியிலிருந்து காலைவரை நிலவைப் பார்க்கலாம்.
Equipment:
√ 16" Dobsonian Telescope(biggest amateur telescope in tamilnadu),
√ 5" Celestron telescope,
√ 8" Dobsonian Telescope,
√ 4.5" Celestron telescope,
also we will be projecting the planets through projector using dedicated planetary camera and telescope.
To know more about the eclipse click the video link: https://youtu.be/MnARw-BdKQc
Prabhu S Kutti (9597640702)
Bala Bharathi (9944966826)



நிழலில்லா நாள் - Zero Shadow Day

இன்று (25-08-2018) திருச்சியில் நமதுப்பள்ளி உள்ள பகுதியில் 'நிழலில்லா நாள்' (Zero Shadow Day). நமது மாணவர்கள், இன்று சென்னையில் விழும் நிழலின் நீளத்தைகொண்டும், எளியக் கணக்கீடுகளைக்கொண்டும் பூமியின் சுற்றளவைக் கணக்கிட்டார்கள்.
எரட்டோஸ்தனஸ் என்ற கிரேக்க அறிஞர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிழலில்லா நாளன்றுதான் பூமியின் விட்டத்தை அளந்து கூறினார். அதே முறையில் பூமியின் சுற்றளவைக் கணக்கிடப்பட்டது.
எவ்வாறு கணக்கிட்டோம்?
திருச்சியில் மதியம் 12:17 மணிக்கு நிழல் பூஜ்ஜியமான நேரத்தில் சென்னையில் நிழலின் நீளம் பூஜ்ஜியமாக இருக்காது, ஏனெனில் இரண்டு ஊர்களும் வெவ்வேறு அட்சரேகையில் இருக்கின்றன. சென்னையிலுள்ள நமது நண்பர் சிவகுமார் அவர்கள் மதியம் சரியாக 12:17 மணிக்கு 137.2 செ.மீ உயரமுள்ள குச்சி ஒன்றின் நிழலின் நீளத்தை 6.8 செ.மீ என அளந்து கூறினார்.
tan¢ = 6.8 / 137.2 = 0.0495
tan¢ = 0.0495 > ¢ = 2.9 °
சென்னையில் நண்பர் இருந்த இடத்திற்கும் நமக்கும் உள்ளதொலைவை 320 கி.மீ என கூகுளில் அறிந்துக்கொண்டோம்.
2.9. 320
360. ?
2.9x = 320 x 360 > x = 39,724 கி.மீ
பூமியின் சுற்றளவு சரியான விடை = 40,075 கி.மீ.
- பாலா பாரதி